Followers

Powered by Blogger.
RSS

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள்-டக்ளஸ் தேவானந்தா!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள்-டக்ளஸ் தேவானந்தா

அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றையதினம் (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றியைப் பெற்றிருந்தாலும் அவர்கள் எமது மக்களுக்கான அரசியல் புனரமைப்பு அபிவிருத்தி மற்றும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள் என்றும் நடைபெறவுள்ள மாகாணசபைக்கான தேர்தலின் போது மக்கள் இதை உணர்ந்து கொண்டு சரியான தீர்ப்புக்களை வழங்குவார்கள் என்றே நம்புகின்றேன்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அரசை மக்கள் புறக்கணித்துள்ளனரா என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது இது ஒரு தவறான புரிந்துணர்வு என்பதுடன் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு தவறான பிரச்சாரங்கள் ஊடாக மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் இந்தத் தவறான பிரச்சாரங்களால் வழிநடாத்தப்பட்டதன் விளைவுகளை எமது மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும் இத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மொழிவாதம், இனங்களைத் தூண்டி தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரச்சாரம் தொடர்பில் இங்குள்ள தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு சரியான வழிகளை எடுத்துக் காட்டவில்லை என்பதுடன் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கோ உணர்வுகளுக்கோ ஏற்ப சரியாக செயற்படவில்லை. அத்துடன், கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான உள்ளுராட்சி வேட்பாளர் ஒருவர் ஈ.பி.டி.பியினரால் தாக்கப்பட்டமை தொடர்பாக கேட்ட போது இச்சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. அத்துடன் எம்மீது திட்டமிட்ட வகையில் குற்றம் சுமத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இனவாதத்தை நம்பியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எமது ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகர சபை மக்களுக்கான தனது செயற்பாடுகளை மிகத்தரமான முறையில் மேற்கொண்டு வருகின்ற போதிலும் அங்குள்ள எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா நகர சபையை கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனால் அச்சபையை சரியாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஈ.பி.டி.பி. கட்சி சார்பில்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள்-டக்ளஸ் தேவானந்தா

அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றையதினம் (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றியைப் பெற்றிருந்தாலும் அவர்கள் எமது மக்களுக்கான அரசியல் புனரமைப்பு அபிவிருத்தி மற்றும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள் என்றும் நடைபெறவுள்ள மாகாணசபைக்கான தேர்தலின் போது மக்கள் இதை உணர்ந்து கொண்டு சரியான தீர்ப்புக்களை வழங்குவார்கள் என்றே நம்புகின்றேன்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அரசை மக்கள் புறக்கணித்துள்ளனரா என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது இது ஒரு தவறான புரிந்துணர்வு என்பதுடன் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு தவறான பிரச்சாரங்கள் ஊடாக மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் இந்தத் தவறான பிரச்சாரங்களால் வழிநடாத்தப்பட்டதன் விளைவுகளை எமது மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும் இத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மொழிவாதம், இனங்களைத் தூண்டி தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரச்சாரம் தொடர்பில் இங்குள்ள தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு சரியான வழிகளை எடுத்துக் காட்டவில்லை என்பதுடன் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கோ உணர்வுகளுக்கோ ஏற்ப சரியாக செயற்படவில்லை. அத்துடன், கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான உள்ளுராட்சி வேட்பாளர் ஒருவர் ஈ.பி.டி.பியினரால் தாக்கப்பட்டமை தொடர்பாக கேட்ட போது இச்சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. அத்துடன் எம்மீது திட்டமிட்ட வகையில் குற்றம் சுமத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இனவாதத்தை நம்பியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எமது ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகர சபை மக்களுக்கான தனது செயற்பாடுகளை மிகத்தரமான முறையில் மேற்கொண்டு வருகின்ற போதிலும் அங்குள்ள எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா நகர சபையை கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனால் அச்சபையை சரியாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஈ.பி.டி.பி. கட்சி சார்பில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமிழ்ப் பிரதிநிதிகளே என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை என்றும் தேர்தல் முடிவுகள் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், ஏனெனில் இது, எல்லோருடைய கண்களையும் திறக்கச் செய்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது உள்ளூர் மற்றும் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment