Followers

Powered by Blogger.
RSS

தொலைந்து போன வசந்டங்களை தேடி தெல்லிப்பளை மக்கள்

தொலைந்து போன வசந்தங்களை தேடி தெல்லிப்பளை கிராம மக்கள் நகர்வடைந்து கொண்டிருக்கிறார்கள் யாழ்ப்பாணத்திலிருந்து 8 கிலோ மீற்றர் வடக்கே அமைந்துள்ள தெல்லிப்பளை கிராமம் 21 வருடற்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின்கட்டுப்பாட்டிலிருந்து இன்று மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் . 21 வருடற்களாக தாய் நிலத்தின் சுவாசக்காற்றை சுவாசிக்காத மக்கள் அலைகடல் போல் திரண்டு செல்கின்றனர்
இயந்திரப்பறவைகள் போட்ட குண்டுகளால் சிதைந்து போன சிதைந்து போன வீடுகளும் ஓங்கி வளர்ந்த மரக்கூட்டத்தையும் தவிர வேறு  எதுவும் இல்லை.யாழ்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் பனக்கூட்டங்களும் வீடுகளின்
எஜமானாய் வரவேற்க காத்திருக்கும் பாம்புகளின் ஆவலையும் கான முடியும் .
மிதி வெடிகள் முழுமையாக அகற்றப்படாமல் கால்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
தேர்தல் காலம் வந்ததும் வாக்குகளை பெறுவதற்காக உதவி என்ற பெயரிலே வாக்கு கேட்கும் வேட்பாளர் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது .
இவர்களுக்கு இவ்வாறு சின்ன சின்ன உதவிகள் தேவையில்லை. 21 வருடம் அகதி முகாம்களில் வாடனை வீடுகளில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் இவர்கள் அலைந்து திரிந்து ஓய்ந்த நிலையில் நிம்மதியான வாழ்வை வாழ வழி செய்யுங்கள். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment